Saturday 6 August 2016

கால்கள் - அபிலாஷ் சந்திரன்

# கால்கள் - (2014 யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்)

# அபிலாஷ் சந்திரன்
விலை ரூ.400/-


• எல்லா திசைகளிலும், நிதானமாக பரந்து, விரிந்து செல்லும் இந்த நாவல், வாசகனின் கவனத்தையும், நுண்வாசிப்பையும் கோருகிறது. இந்த நாவலின் களமும், உளவியல் சார் கதை சொல்லும் விதமும், அபிலாஷை தமிழில் முக்கியமாக கவனிக்க வேண்டிய, தனித்துவம் மிக்க இளம் எழுத்தாளராக முன்னிருத்துகின்றன.

மழைத்தும்பிகள் - அறிவுமதி

# மழைத்தும்பிகள்
# கவிஞர் அறிவுமதி
# விலை ரூ.140/-


நண்பர்களாய் காமம் உணர்வதற்குள்
கடந்து விடுகின்றன
ஆறேழு ஆண்டுகள்

நம்புங்கள்
நம்மைவிடத் தெளிந்தவர்கள்
நம் பிள்ளைகள்

காதலர் நாள்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தாலிகள் வைத்திருக்கிறீர்களா?

இப்படி எளிய சொற்களில் இனிய மற்றும் அரிய எண்ணங்களைக் கூறி, மழைத் தும்பிகள் மூலம் இளையோரை தன்பால் ஈர்த்தார் பாவலர் அறிவுமதி.
உடல், உயிர், இனம், மொழி, சமுதாயம் ஆகியனவற்றின் மீதான அளவு கடந்த காதலை மிக அளவான சொற்களில் வெளிப்படுத்தி அவர் எழுதிய பாக்கள், குங்குமம் வார ஏட்டில் தொடராக வெளியானபோதே ஆகப்பெரும் வரவேற்பைப் பெற்றன.வாராவாரம் சிதறிய தேன் துளிகள் இப்போது பெரும் தேனடையாக உருவாகியிருக்கிறது. தொடராக வந்த பாக்கள் இப்போது புத்தகமாக வடிவெடுத்திருக்கிறது.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ்

# ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"
# ஜான் பெர்க்கின்ஸ்
# தமிழில்: இரா.முருகவேள்
# விலை ரூ.230/-

உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்கிற எண்ணம் பரவலாக உண்டு. ஆனால், அது போலி என்றும், அந்த எண்ணத்திற்குப் பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலகம் முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைவுச் சதிவேலைகளை செய்து வருகிறது எனபதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.
மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளது இந்நூல்

உலக சினிமா வரலாறு – ஜாக் சி.எல்லீஸ்

# உலக சினிமா வரலாறு – ஜாக் சி.எல்லீஸ்
# தமிழில்: வேட்டை எஸ்.கண்ணன்
# விலை ரூ.495/-


நான் சினிமாவைப் புரிந்துகொள்ள இதை வாசிக்கவில்லை, ஒரு கலைவடிவம் எப்படித் திரண்டு உருவாகி வருகிறது என்று அவதானிக்க – அது எப்படி சமூகத்தின் பல்வேறு உள்ளோட்டங்களால் தன் தனித்துவத்தை அடைகிறது என்று பார்க்க; என்று பார்க்க அதன் வீச்சு சமூகத்தை எப்படி மாற்றியமைக்கிறது என்று புரிந்துகொள்ள வாசித்தேன்.
சமீபத்தில் இத்தகைய ஒரு முழுமையான பார்வையை அளித்த பிறிதொரு நூலை நான் வாசிக்கவில்லை… அறுநூறூ பக்கம் கொண்ட இப்பெரிய நூல் நெடுங்காலமாகவே ஒரு கிளாசிக் என்று கருதப்படுவது – இதை சரளமான மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் வேட்டை எஸ்.கண்ணன்
- எழுத்தாளர் ஜெயமோகன்

மஹாஸ்வேதா தேவி கதைகள் - தமிழில்: புவனா நடராஜன்



#

# மஹாஸ்வேதா தேவி கதைகள்
# ரூ.280/-
# தமிழில்: புவனா நடராஜன்


மஹாஸ்வேதா தேவி: வங்கமொழி எழுத்தாளரும் பழங்குடி மக்களுக்காகப் போராடிய சமூக ஆர்வலராமான இவர் 91 வயதில் நேற்று கொல்கத்தாவில் காலமானார். 
1926 ஆன் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் டாக்காவில் பிறந்த இவர் தந்தை மணீஷ் காடக், தாயார் தாத்ரி தேவி ஆவர். இருவரும் வங்கமொழியில் புகழ்பெற்ற கவிஞர்களாக விளங்கினர். இலக்கியம், சமூகப் பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டிய மஹாஸ்தேவி தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.

1979 – சாகித்ய அகாடமி, 
1986 – பத்மஸ்ரீ, 
1996 – ஞானபீடம், 
1997 – ரமோன் மகசேசே, 
2006 – பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்

நேற்று காலமான மஹாஸ்தேவிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘வங்பத்தின் தாய், எனது வழிகாட்டியை இழந்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
# காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேறகாது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பவை அவருத எழுத்துக்கள். வாசகரை சிந்திக்க வைப்பவை. தமிழில் முதன்முறையாக மஹாஸ்வேதா தேவியின் வீரியமிக்க எழுத்துக்கள் உங்கள் கைகளில்

ஜாதியற்றவளின் குரல் - ஜெயராணி

# ஜாதியற்றவளின் குரல்
# ஜெயராணி
# 250/-



கல்லூரிப் படிப்பு முடிந்ததும் வருமானத்துக்கான வேலை வாய்ப்புகளைத் தேடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக தலித்துகளின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை தேடி வெயிலிலும் புழுதியிலும் அலைந்து திரிந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முதல் தலித் பெண் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயராணிதான் என்று கருதுகிறேன்.
- எஸ்.வி.ராஜதுரை

நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையை பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகிவிட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும், பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனே அநீதியும் நேர்மையின்மையும்தானே! பார்ப்பனர்களின் பிடியிலிருக்கும் வெகுமக்கள் ஊடகங்களின் நிறம் மட்டும் கறுப்பாக இருந்துவிட எந்த நியாயமும் இல்லை.
- ஜெயராணி