#
# மஹாஸ்வேதா தேவி கதைகள்
# ரூ.280/-
# தமிழில்: புவனா நடராஜன்
மஹாஸ்வேதா தேவி: வங்கமொழி எழுத்தாளரும் பழங்குடி மக்களுக்காகப் போராடிய சமூக ஆர்வலராமான இவர் 91 வயதில் நேற்று கொல்கத்தாவில் காலமானார்.
1926 ஆன் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் டாக்காவில் பிறந்த இவர் தந்தை மணீஷ் காடக், தாயார் தாத்ரி தேவி ஆவர். இருவரும் வங்கமொழியில் புகழ்பெற்ற கவிஞர்களாக விளங்கினர். இலக்கியம், சமூகப் பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டிய மஹாஸ்தேவி தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
1979 – சாகித்ய அகாடமி,
1986 – பத்மஸ்ரீ,
1996 – ஞானபீடம்,
1997 – ரமோன் மகசேசே,
2006 – பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்
நேற்று காலமான மஹாஸ்தேவிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘வங்பத்தின் தாய், எனது வழிகாட்டியை இழந்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
# காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேறகாது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பவை அவருத எழுத்துக்கள். வாசகரை சிந்திக்க வைப்பவை. தமிழில் முதன்முறையாக மஹாஸ்வேதா தேவியின் வீரியமிக்க எழுத்துக்கள் உங்கள் கைகளில்