Saturday 6 August 2016

ஜாதியற்றவளின் குரல் - ஜெயராணி

# ஜாதியற்றவளின் குரல்
# ஜெயராணி
# 250/-



கல்லூரிப் படிப்பு முடிந்ததும் வருமானத்துக்கான வேலை வாய்ப்புகளைத் தேடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக தலித்துகளின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை தேடி வெயிலிலும் புழுதியிலும் அலைந்து திரிந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முதல் தலித் பெண் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயராணிதான் என்று கருதுகிறேன்.
- எஸ்.வி.ராஜதுரை

நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையை பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகிவிட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும், பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனே அநீதியும் நேர்மையின்மையும்தானே! பார்ப்பனர்களின் பிடியிலிருக்கும் வெகுமக்கள் ஊடகங்களின் நிறம் மட்டும் கறுப்பாக இருந்துவிட எந்த நியாயமும் இல்லை.
- ஜெயராணி