# ஒரு கூர்வாளின் நிழலில் . .
# (புலிகளின் மகளிரணித் தலைவியின் தன் வரலாறு)
# தமிழினி
# விலை ரூ.125/-
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும்
இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். எத்தனையோ
இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்துவிட்டதே என்ற துக்கமும் கேவலும்.
அதே நேரம் உண்மையின் கூர்முனைகள் யாருக்கும் அஞ்சாமல் பல பிம்பம்களைக் கீறுகின்றன.
நேர்மையின் சித்திரங்கள் பிரச்சாரத்தின் நெடுஞ்சுவர்களைக் கடந்து மனதத்தை எல்லா திசைகளிலும்
அடையாளம் காண்கின்றன. பிரபாகரனை நேரில் சந்திக்கக்கூடிய, அவரை இறுதிவரை சந்தித்து வந்தவர்களுடன்
அந்தரங்கமாக உரையாடக்கூடிய உயர் நிலையில் இருந்தவர் தமிழினி. உயர்நிலைப் போராளிகள்
அதிகமும் இறுதிப் போரில் கொல்லப்பட்டார்கள். அல்லது சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்கள்.
இந்த இரண்டு நெருப்பு வளையங்களிலும் தப்பிப் பிழைத்தவர் தமிழினி. இதுவரை அறியப்படாத
பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல். தவிர்க்கவே முடியாத நினைவோடைப் பதிவு இது.