#தமிழகத்தில் புரதவண்ணார்கள்
#த.தனஞ்செயன்
#(தமிழரின் குடித்தொழில் மரபு பற்றிய ஆய்வு நூல்)
#ரூ.200/-
பண்டைய இந்தியாவின் புராதன குழுக்களில் ஒன்றான புரதவண்ணார்களைப் பற்றிய ஒரு
வரலாற்று ஆய்வாக இருப்பதால் கல்வெட்டு மற்றும் வாய்மொழித் தரவுகளை நடைமுறைத் தரவுகளோடு
ஒப்பிட்டுப் பார்க்கும் அரிய முயற்சியை இந்நூல் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதியப் பிரிவினைகள் தோன்றிய வரலாற்றுப்
பின்புலத்தையும் சில குறிப்பிட்ட சாதிகள் மட்டும் எப்படிக் காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு
வருகிறது என்பதையும் அரிய சான்றுகளோடு இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது.
தீண்டாமையின் உச்சமாக விளங்கக்கூடிய எத்தனையோ சான்றுகளை இந்த நூலின் களப்பகுதித்
தரவுகள் சுட்டுகின்றன.