Friday 22 July 2016

சிந்துவெளிப்‬ பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்‬.பாலகிருஷ்ணன்

‪#‎ சிந்துவெளிப்‬ பண்பாட்டின் திராவிட அடித்தளம்
‪#‎ ஆர்‬.பாலகிருஷ்ணன்
‪#‎ ரூ‬.150/-
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்கள் கூட சிந்துவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை நிலைத்துள்ளன என்ற செய்தி முற்றிலும் புதியது, எவரும் கேள்விப்படாதது.
சிந்துவெளி நகரங்களின் “மேல் – மேற்கு : கீழ் - கிழக்கு” என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு. சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு.
நூலாசிரியர் திராவிட மொழியியலையும், சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளைப் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்.
- ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி ஆய்வாளர்